Sunday, April 13, 2014
Monday, January 14, 2013
Sunday, December 30, 2012
மனதை கலங்க செய்யும் காணொளி (Video)
உலக நாடுகளில் உள்ள பலதரபட்ட மக்கள் வறுமையின் கொடுமையால் உண்ண உணவின்றி பசியின் கொடுமைக்கு இரையாகிக் கொண்டிருந்தாலும் அதனை பற்றியெல்லாம் கவலையின்றி சிலர் உல்லாச வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டுதான் உள்ளனர் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி.
இவர்கள் நினைத்தால்பசியின் கொடுமையின் காரணமாக மரணத்தை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு ஒருவேளை உணவாது தந்து காப்பாற்ற முடியும் செய்வார்களா?
Tuesday, December 18, 2012
நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!
இந்த செய்தியானது முகப்புத்தக(FACEBOOK) நண்பரின் பதிப்பில் கண்டது பயனுள்ள செய்தி என்பதால் அதனை அப்படியே தந்துள்ளேன். இந்த செய்தியினை தந்த அந்த நண்பருக்கு மிக்க நன்றி.
உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோய் அறிகுறிகளை கண்டறிய...
நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.
நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும்.
மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.
நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.
மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.
நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...
1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.
3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.
5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.
ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோய் அறிகுறிகளை கண்டறிய...
நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.
நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும்.
மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்.
நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.
மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.
நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...
1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.
3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.
5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.
ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Tuesday, November 13, 2012
திராவிடனுக்கு சொந்தமானது தீபாவளி ?
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நாம் ஆழ்ந்து பார்த்தால் தீபாவளி என்பது உருவாக முக்கிய காரணமாக இருப்பது திரவிடனின் பங்குதான் அதிகம். நெருப்பினை தெய்வமாக வாங்குபவர்கள் நம் தமிழர்கள். நமது தமிழ்நாட்டினை ஆண்ட மன்னர்கள் அனைவரும் முக்கியத்துவம் தந்தது நெருப்புக்குதான். அந்தவகையில் அனைத்து சடங்குகளும் தீயினை முன்னிறுத்தியே செய்யப்பட்டன. எந்த ஒரு அரச குடும்ப விழாவானாலும் சரி, அந்த நாட்டுக்கு தொடர்புடைய அனைத்து விழாக்களும் தீயினை வைத்தே கொண்டாடப்பட்டுள்ளது. அவர்களின் அரண்மனை மற்றும் கோவில்கள் அனைத்திலும் வெற்றியினையோ அல்லது முக்கிய விழாக்களை கொண்டாடும் போதும் விளக்குகளால் அலங்கரித்து உற்சாகமுடன் கொண்டாடினர். அக்கால மக்களும் தங்களது வீட்களில் அகல் விளக்கு மாடம போன்றவற்றை அமைத்திருந்தனர். தங்களது இறப்பு, பிறப்பு போன்றவற்றிலும் இந்த தீயானது முதலிடம் பெற்றது. எனவே இந்த தீபாவளி ஒன்றும் நமக்கு புதியதல்ல. பலகாலங்களாக நமக்கு வழக்கமாக இருந்து வந்தது இன்று மிக பெரிய பண்டிகையாக கொண்டாட படுகிறது.
பிற்காலத்தில் தான் பட்டாசு வெடிப்பதும் புத்தாடை அணிவதும் என ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாம் ஆழ்ந்து பார்த்தால் தீபாவளி என்பது உருவாக முக்கிய காரணமாக இருப்பது திரவிடனின் பங்குதான் அதிகம். நெருப்பினை தெய்வமாக வாங்குபவர்கள் நம் தமிழர்கள். நமது தமிழ்நாட்டினை ஆண்ட மன்னர்கள் அனைவரும் முக்கியத்துவம் தந்தது நெருப்புக்குதான். அந்தவகையில் அனைத்து சடங்குகளும் தீயினை முன்னிறுத்தியே செய்யப்பட்டன. எந்த ஒரு அரச குடும்ப விழாவானாலும் சரி, அந்த நாட்டுக்கு தொடர்புடைய அனைத்து விழாக்களும் தீயினை வைத்தே கொண்டாடப்பட்டுள்ளது. அவர்களின் அரண்மனை மற்றும் கோவில்கள் அனைத்திலும் வெற்றியினையோ அல்லது முக்கிய விழாக்களை கொண்டாடும் போதும் விளக்குகளால் அலங்கரித்து உற்சாகமுடன் கொண்டாடினர். அக்கால மக்களும் தங்களது வீட்களில் அகல் விளக்கு மாடம போன்றவற்றை அமைத்திருந்தனர். தங்களது இறப்பு, பிறப்பு போன்றவற்றிலும் இந்த தீயானது முதலிடம் பெற்றது. எனவே இந்த தீபாவளி ஒன்றும் நமக்கு புதியதல்ல. பலகாலங்களாக நமக்கு வழக்கமாக இருந்து வந்தது இன்று மிக பெரிய பண்டிகையாக கொண்டாட படுகிறது.
பிற்காலத்தில் தான் பட்டாசு வெடிப்பதும் புத்தாடை அணிவதும் என ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Tuesday, October 2, 2012
தேசம் காத்த தந்தை
வெள்ளையரிடமிருந்து நமக்கெல்லாம் விடுதலை வாங்கித்தந்த நமது தேச தந்தை மகாத்மா காந்திக்கு இன்று பிறந்தநாள். அவரும், அவருடன் சேர்ந்து போராடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் இன்றே பிறந்த நாள் விழாவாக கொண்டாடுவது சிறப்பாக இருக்கும். தன்னுடைய இன்னுயிரை காந்தியுடன் இணைத்து போராடி வீரமரணம் அடைந்த அந்த தியாகிகளுக்கும் சேர்த்து இந்த தினம் தியாகிகளின் பிறந்த தினமாக கொண்டாட படவேண்டும்.
அனைவரும் நமது தேச தந்தையின் வழிகாட்டுதலை பின்பற்றி அவருக்கு பெருமைசேர்க்க வேண்டும்.
ஜெயஹிந்த் வாழ்க பாரத நாடு வாழ்க ஒற்றுமை
Wednesday, September 19, 2012
Subscribe to:
Comments (Atom)

.jpg)










